மணிப்பூர் வழக்கை சிபிஐ விசாரிக்கவும் மணிப்பூரிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றும் படியும் மத்திய அரசு கேட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கலவரம் வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். மேலும் ஏராளமானோர் ஊரை விட்டு வெளி மாநிலங்களுக்கு சென்று விட்டனர். மேலும் இந்த வன்முறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றது idhu பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ. க்கு மாற்ற வேண்டும் எனவும் மணிப்பூரில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. அண்டை மாநிலமான அசாமில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.