சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு மாணவ மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு எப்போது என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்து வந்தனர்.
இந்நிலையில் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் பிளஸ் டூ மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் இரண்டாம் தேதி வரை தேர்வு நடக்கவிருக்கிறது. பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி முதல் மார்ச் 13ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.