சிபிஎஸ்இ பாடப்பிரிவில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இன்று காலையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மதியம் ஒரு மணி அளவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.
நிகழாண்டில் 22.38 லட்சம் மாணவ மாணவிகள் சிபிஎஸ்இ பாட பிரிவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் 20.95 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 93.6% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 0.48% கூடுதலாகும். சென்னையை பொறுத்தவரை 99.3% மாணவ மாணவியர் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மதிப்பெண் பட்டியலை www.cbse.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.