இன்று மதியம் சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. அதன்படி, தேர்வு எழுதியவர்களில் 93.12% தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இன்று காலை சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 21ஆம் தேதி வரை, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இதில் 19 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்து, தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. cbseresults.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வு வாரியம் கூறியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முந்தைய 2019 ஆம் ஆண்டில், 91.10% தேர்ச்சி விகிதம் பதிவாகி இருந்தது. அதைவிட கூடுதலாக, நிகழாண்டில் 93.12% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளதால், மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.