கூகுள் நிறுவனம் தனது தலைமை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக காம்பெடிஷன் கமிஷன் ஆப் இந்தியா சுமார் 1338 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும், கூகுள் நிறுவனம் தனது நடைமுறையை மாற்றுவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் நிர்ணயித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் நிறுவனத்தின் பிளே ஸ்டோர் ஆகியவற்றின் பயன்பாடு மற்றும் வணிக முறை குறித்து சிசிஐ ஆராய்ந்து வந்தது. மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்கு தளம் மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள வேற்றுமை குறித்தும் ஆராய்ந்தது. இந்த இரு இயங்கு தளங்களின் வணிகப் பயன்பாட்டில் குறிப்பிட்ட சில வேறுபாடுகள் இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளன. அதனை அடிப்படையாகக் கொண்டு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சிசிஐ தெரிவித்துள்ளது. சிசியின் ஆராய்ச்சி படி, ஆப்பிள் நிறுவனத்தின் வணிகம், நுண்ணறிவு திறன் வாய்ந்ததொரு கைபேசியை விற்பனை செய்வதை நோக்கி நகர்கிறது. அதே வேளையில், கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகள் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் நகர்கிறது.
அத்துடன், கூகுள் நிறுவனத்தின் பல்வேறு செயலிகள் கொண்ட ப்ளே ஸ்டோர் செயலியின் வணிக நோக்கம் குறித்து ஆராயப்பட்டது. ப்ளே ஸ்டோருக்கான வாடிக்கையாளர்கள் நிலையை மூன்றாக சிசியை பிரித்தறிந்துள்ளது. முதலாவது, கைபேசி உற்பத்தியாளர்கள். அவர்கள் குறிப்பிட்ட சில செயலிகளை, கைபேசி விற்பனைக்கு முன்னதாகவே வாடிக்கையாளருக்கு தயார் நிலையில் கொடுக்க பிளே ஸ்டோர் செயலியை இயக்குகின்றனர். இரண்டாவது செயலிகளை உருவாக்குபவர்கள். மூன்றாவது செயலியை பயன்படுத்தும் நுகர்வோர்கள். இந்நிலையில், கூகுளின் ப்ளே ஸ்டோர் தனது தலைமையை பயன்படுத்தி, கைபேசி உற்பத்தியாளர்களை குறிப்பிட்ட சில செயலிகளை கைபேசியின் இயங்குதளத்துடன் இணைத்து செயல்படுத்த வலியுறுத்துகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படும் செயலிகளை அன்இன்ஸ்டால் செய்ய முடியாது. (GMS) கூகுள் மொபைல் சூட் என்ற பெயரில் இந்த நிர்பந்தத்தை கூகுள் நிறுவனம் கைப்பேசி உற்பத்தியாளர்களிடம் திணிக்கிறது. இது தலைமை அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயலாகும்.
அதே வேளையில், குறிப்பிட்ட சில துறைகளில் தனது தலைமை அதிகாரத்தை கூகுள் நிறுவனம் சற்று தளர்த்தியுள்ளது. குறிப்பாக, இணைய வழி தேடல் குறித்து தனது செயல்பாடுகளை தளர்த்தி உள்ளது. இதுவும், வணிக நோக்கிலான செயலே ஆகும். எனவே, ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, செக்க்ஷன் 4(2) படி, கூகுள் நிறுவனம் தலைமை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வந்துள்ளது உறுதியாகிறது. இதனால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.