இஸ்ரேல் பணய கைதிகளின் பெயர் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டது.
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த 19-ந்தேதி முதல் அமலில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, பிடிக்கப்பட்ட கைதிகளை பரஸ்பரம் விடுவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த ஒப்பந்தம் 42 நாட்கள் நீடிக்கும். அதன் பிரகாரம், ஹமாஸ் அமைப்பு காசாவில் இருந்து பிடித்துள்ள 33 இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிக்கிறது. முதல்கட்டத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 இஸ்ரேல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இரண்டாம் கட்டத்தில், இஸ்ரேல் ராணுவ வீராங்கனைகள் கரீனா அரிவ், டேனியலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய 4 பேர் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அறிவித்துள்ளது. இதற்கு ஈடாக, 200 பாலஸ்தீனிய கைதிகளையும் விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மதியத்தில்தான் விடுவிப்பு நிகழ்ச்சி நடைபெறும்.