காசாவில் மீண்டும் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் 129 பிணைக்கைதிகள் உள்ளனர். அவர்களை மீட்க இஸ்ரேல் முயற்சி செய்து வருகிறது. இதற்காக மீண்டும் ஒருமுறை போர் நிறுத்தத்திற்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ஐசக் ஹெர்சாக் தெரிவித்தார்.
இந்நிலையில், போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியே இன்று எகிப்து செல்கிறார். முன்னதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அமெரிக்கா இதற்கு தடை விதித்ததால் அதனை நிறைவேற்ற முடியாத நிலை இருந்து வருகிறது.














