இந்தியாவில் இந்தியர்கள் தினமும் 5 மணி நேரம் செல்போனில் செலவு செய்வதாக கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இந்தியரும் தினமும் சராசரியாக 5 மணி நேரம் செல்போனில் செலவிடுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு தனியார் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் செல்போன் பயன்பாடு தொடர்பான ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஒவ்வொரு இந்தியரும் தினமும் சராசரியாக 5 மணி நேரம் செல்போனில் செலவிடுவதாக கூறப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் மக்கள் சமூக ஊடகங்களில் நேரத்தை கழிக்கின்றனர், மற்றவர்கள் விளையாட்டுகள் மற்றும் வீடியோக்களில் நேரம் செலவிடுகிறார்கள்.
இந்த வகையில், இந்தியா தினசரி செல்போன் பயன்படுத்துவதில் இரண்டாவது இடத்தில் உள்ளது, மேலும் உலகிலேயே அதிகமான செல்போன் பயனர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. நாட்டின் 40 சதவீத மக்களும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துகின்றனர். 5ஜி பயன்பாட்டிலும் குறிப்பிடத்தகுந்தகுறிப்பிடத்தகுந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, குறிப்பாக 2024-ம் ஆண்டில் 27 மில்லியனாக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் 40 சதவீதம் பேர் இணைய சந்தாதாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.