பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று தொடங்கியது.
நாடு முழுவதும் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பா. ஜனதா தலைமையிலான கூட்டணி 296 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் புதிய ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கப்படவில்லை. தனித்து 240 இடங்கள் மட்டுமே பெற்றுள்ளதால், புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும். எனவே பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து இன்று கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை பாஜக கூட்டியுள்ளது. அதன்படி இன்று காலை மத்திய அமைச்சரவை கூடியது. இந்தக் கூட்டத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது. இதேபோன்று காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது