மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு 50% ஓய்வூதியத்தை உறுதிப்படுத்தும் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கீழ், அரசு ஊழியர்களுக்கு கடைசி ஊதியத்தின் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவார்கள். 25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர், ஓய்வு பெறும் போது, 12 மாதங்களில் பெற்ற அடிப்படை ஊதியத்தின் 50% ஓய்வூதியமாக கிடைக்கும். இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு அவரது ஓய்வூதியத்தின் 60% வழங்கப்படும். 10 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியருக்கு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியமாக வழங்கப்படும். புதிய திட்டம் 2025-ல் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.