மும்பை ஏர் இந்தியா கட்டிடத்தை மராட்டிய அரசுக்கு ரூபாய் 1061 கோடிக்கு வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மும்பையில் நரிமன் பாய்ண்ட் பகுதியில் 23 மாடிகளுடன் அமைந்த ஏர் இந்தியா பிரம்மாண்ட கட்டிடம் உள்ளது. இங்கு மராட்டிய அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டபோது இந்த கட்டிடம் விற்பனை செய்யப்படவில்லை. எனவே அந்த கட்டிடத்தை ரூபாய் 1061 கோடிக்கு வாங்க மராட்டிய மாநில மந்திரி சபை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியா கட்டிடத்தை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இது தவிர ஏர் இந்தியா நிறுவனம் மராட்டி அரசுக்கு வழங்க வேண்டிய ரூபாய் 298.42 கோடி பாக்கி தள்ளுபடி செய்ய மராட்டிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.