மருத்துவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருந்து நிறுவனங்கள் இலவச பரிசுகள் மற்றும் பயண வசதிகளை வழங்குவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
தேசிய மருத்துவ கவுன்சில் மருத்துவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருந்து நிறுவனங்கள் மற்றும் ஏஜென்ட்கள் இலவச பரிசுகள் மற்றும் பயண வசதிகளை வழங்குவதற்கு தடை விதிக்கும் வகையில் மருந்து சந்தைப்படுத்துதல் நடைமுறைகள் மீதான சீரான விதிமுறையை வெளியிட்டுள்ளது.
அதில் ஒரு மருத்துவரை அணுகுவதற்கு அவர்களுக்கு பணம் சார்ந்த எந்தவொரு பலனையும் வழங்கக்கூடாது.
மருந்துகளை பரிந்துரைக்க தகுதி இல்லாதவர்களுக்கு இலவச மாதிரிகள் வழங்கப்படக் கூடாது.
தங்கும் விடுதி, ஓய்வு விடுதி, விலை உயர்ந்த உணவு போன்ற எந்த ஒரு விருந்தோம்பலையும் மருத்துவர்களுக்கு வழங்கக்கூடாது.
கருத்தரங்க மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்கு உள்நாட்டு அல்லது வெளிநாடுகளுக்கான பயண வசதிகளை வழங்கக் கூடாது.
இவ்வகையான நிபந்தனைகளை இனி மருந்து நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.