கொரோனா அதிகரித்து வருவதை தொடர்ந்து மரபணு சோதனைக்கு மத்திய அரசு உத்தரவு

December 21, 2022

சீனா மற்றும் அமெரிக்காவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை தொடர்ந்து மரபணு வரிசைமுறையை தீவிரமாக பரிசோதிக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. அமெரிக்கா, கிழக்காசிய நாடுகளான ஜப்பான், தென் கொரியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு […]

சீனா மற்றும் அமெரிக்காவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை தொடர்ந்து மரபணு வரிசைமுறையை தீவிரமாக பரிசோதிக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. அமெரிக்கா, கிழக்காசிய நாடுகளான ஜப்பான், தென் கொரியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், சீனா உட்பட பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளதை அடுத்து, நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே, புதிதாக தொற்று உறுதியாகும் நபர்களின் மாதிரிகளை, மரபணு வரிசைமுறையை பரிசோதிக்கும், 'இன்சாகாக்' சோதனை கூடத்திற்கு அனுப்பி தீவிர பரிசோதனை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இதற்காக அனைத்து மாநிலங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu