அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரை வெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு ராம்சார் தளம் என்று அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவேட்டி கிராமத்தில் இருக்கும் ஏரியை நம்பி 50 ஆயிரம் ஏக்கரில் பாசன நிலங்கள் உள்ளன. இது பாசனத்திற்கு மட்டுமின்றி பறவைகளின் புகலிடமாகவும் விளங்கி வருவதால் கடந்த 1999 ஆம் ஆண்டில் பறவைகள் சரணாலயம் ஆக தமிழக அரசு அறிவித்தது. தற்போது இதற்கு ராம்சார் தளம் என்ற அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 75 இலிருந்து 80 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் பறவைகள் பாதுகாக்கப்படும். அதிகமான வெளிநாட்டு பறவைகளும் வருவதற்கு வாய்ப்புள்ளதாக மாவட்ட வன அலுவலர் கூறியுள்ளார்.