நாட்டில் பல்வேறு பகுதிகளில் அதன் ஐகோர்ட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்ற மசோதாவிற்கு எதிராக பல தரப்பில் மாறுபட்ட கருத்துக்கள் வெளிவந்ததால் ஐகோர்ட் பெயரில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் பல நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வரும் நிலையில் அந்தந்த பகுதிகளில் இயங்கி வரும் ஐகோர்ட்டுகளின் பெயரையும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதில் பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் என்ற பெயரில் இயங்கி வரும் ஐகோர்ட்டுகள் அதன் தற்போதைய பெயரான மும்பை, கொல்கத்தா, சென்னை ஐகோர்ட்டுகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைத்திருந்தன.
ஒரிசா என்பது ஒடிசா ஆகவும், கவுகாத்தி என்பது குவகாத்தியகாவும் மாற்ற வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டது. இந்த வகை மாற்றங்களுக்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் ஐகோர்ட்டின் பெயரை மாற்றுவதற்கு சில கோர்ட்டுகள் விரும்பவில்லை. அதிலும் குறிப்பாக தமிழக அரசு தமிழ்நாடு ஐகோர்ட் என பெயர் மாற்றுமாறு வைத்த கோரிக்கைகளுக்கு மெட்ராஸ் ஐகோர்ட் அதிருப்தியை தெரிவித்திருந்தது. அதேபோல் கொல்கத்தா ஐகோர்ட் என பெயர் மாற்றுவதற்கு அந்த மாநில அரசும் விரும்பவில்லை. இது குறித்து சட்டம் மந்திரி அர்ஜுன் ராம் மெக்வால், 2016 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஐகோர்ட்டுகள் பெயர் மாற்ற மசோதா 2016 என்ற மசோதா 16 வது மக்களவை கலைக்கப்பட்டதால், மேலும் தொடர முடியவில்லை. இந்த விவாகரத்தில் மசோதா எதுவும் திரும்பக் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.