சென்ட்ரல்-மைசூரு வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னை சென்ட்ரல்-மைசூரு வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 12-ந்தேதி தொடங்கியது. புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இந்த ரெயில் இயக்கப்படுகிறது. முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய சொகுசு இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பயணிகளுக்கு அளிக்கப்படுகின்றன. மேலும், இந்த ரெயிலுக்கு பயணிகள் இடையே அதிக வரவேற்பு கானப்படுகிறது.
சென்னையில் இருந்து மைசூரு சென்ற ரெயிலில் எக்சிகியூட்டிவ் வகுப்பில் சராசரியாக 147 சதவீதமும், சேர் காரில் 115 சதவீதமும் நிரம்பின. இதேபோல மைசூரில் இருந்து சென்ட்ரல் வந்த ரெயிலில் எக்ஸ்சிகியூட்டிவ் வகுப்பில் 125 சதவீதமும், சேர் காரில் 97 சதவீதமும் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.