அந்நிய முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய நிறுவனங்கள் கிப்ட் சிட்டி சந்தையில் நேரடியாக பட்டியலிடபடலாம். அதற்கான அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் சர்வதேச சந்தை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய நிறுவனங்களை நேரடியாக பட்டியல் இடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த வகையில், தற்போது கிப்ட் சிட்டியில் நேரடியாக பட்டியலிடப்படுவதற்கு தேவைப்படும் தகுதி பட்டியல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. இது இந்திய நிறுவனங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் அறிக்கை படி, India International Exchange மற்றும் NSE International Exchange ஆகியவை கிப்ட் சிட்டி பட்டியலில் இடம் பெற தகுதி பெற்றுள்ளன.