மத்திய அரசு, கச்சா எண்ணெய் மீதான விண்டு பால் வரியை 3500 ரூபாயிலிருந்து பூஜ்ஜியமாக அறிவித்துள்ளது. மேலும், டீசல் மீதான வரியை லிட்டர் ஒன்றுக்கு 50 பைசாவாக குறைத்துள்ளது. இது முந்தைய அளவைவிட 50% குறைவாகும்.
இந்திய அரசு, கடந்த ஜூலை மாதம் முதல், கச்சா எண்ணெய்க்கு விண்டு பால் வரியை நிர்ணயித்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைகள் பேரல் ஒன்றுக்கு 70 டாலருக்கு கீழ் குறையும் பொழுது, விண்டு பால் வரியை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இந்நிலையில், கடந்த மாதம் கிட்டத்தட்ட 70 டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய் விலைகள் குறைந்தன. ஆனால், இந்த வாரம் மீண்டும் 85 ரூபாயாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. எனவே, இந்திய அரசு விண்டு பால் வரியில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. ஆனால், இது தற்காலிகமான மாற்றமாக சொல்லப்பட்டுள்ளது.