கச்சா எண்ணெய் மீதான விண்டுபால் வரியை உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதே வேளையில், டீசல் மற்றும் விமான எரிபொருளுக்கான விண்டுபால் வரி குறைக்கப்படுகிறது.
பெட்ரோலியம் சார்ந்த கச்சா எண்ணெய் மீதான விண்டுபால் வரி ஒரு டன்னுக்கு 1300 ரூபாயாக இருந்தது. இது தற்போது 2300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. டீசலுக்கு விதிக்கப்பட்டிருந்த விண்டுபால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. விமான எரிபொருள் மீதான விண்டுபால் வரி ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. மேலும், விரைவில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலைகள் 10 ரூபாய் வரை குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக, பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பெட்ரோல் டீசல் விலைகள் குறைக்கப்படும் என கருதப்படுகிறது.