நிலக்கரியின் இறுதி சாம்பல் மூலம் உருவாக்கப்படும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவதற்கு, சிஇஎஸ்சி (CESC) என்ற நிறுவனம் இந்தியாவில் காப்புரிமையை பெற்றுள்ளது.
இந்த நிறுவனம், சாம்பலில் பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தியது. அதில், நிலக்கரியில் இருந்து பெறப்படும் இறுதிக்கட்ட சாம்பல், ஆற்று மணலை போல தன்மையைக் கொண்டது என நிறுவப்பட்டுள்ளது. எனவே, ஆற்று மணலுக்கு மாற்றாக சாம்பலை பயன்படுத்த முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், கட்டுமானத் துறையில், 25 முதல் 70% வரை சாம்பல் பயன்பாடு உயர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனல் மின் நிலையங்களில் இந்த சாம்பலை பயன்படுத்துவதால், கார்பன் உமிழ்வை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்து இந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள இந்த நிறுவனம், சாம்பல் தொழில்நுட்பம் சார்ந்த பயன்பாடுகளுக்கு இந்திய காப்புரிமையை பெற்றுள்ளது.