தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களில் மழை வாய்ப்பு இருப்பதால் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்று வேகமாறுபாட்டு காரணமாக தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.