கோடை மழையின் காரணமாக தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி வரை மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும், கேபுபாராவிற்கும் இடையே ரீமால் புயல் நேற்று இரவு கரையை கடந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 6 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் அங்கங்கே மழை பெய்து வருவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜூன் ஒன்றாம் தேதி வரை இடி மின்னலுடன் மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது