மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி மாவட்டங்களில் 23ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் 23ஆம் தேதி வரை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் மழை வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில வட தமிழக உள் மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும், இதர பகுதிகளிலும் இன்று முதல் 25ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.