ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு திறன், மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநில சி ஐ டி பொருளாதார பிரிவு டிஎஸ்பி முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை இன்று ஊழல் வழக்கில் கைது செய்துள்ளார்.ஆந்திராவில் நாந்தியாளாவில் ஞானபுரம், ஆர்.கே பங்க்ஷன் ஹாலில் கைது செய்தனர். இதற்கான வாரெண்ட் சந்திரபாபு நாயுடுவிடம் கொடுக்கப்பட்டது.இதில் நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள் இந்த தகவல் உங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இது ஜாமீனில் வெளி வர முடியாத குற்றம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.