சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து ஐந்து நாட்களில் 770 கோடி அதிகரிப்பு

பாராளுமன்ற தேர்தல் முடிந்த ஐந்து நாட்களில் சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து 770 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில் நடைபெற்ற மாநில தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கட்சி வெற்றி பெற்றது. அதேபோல் மக்களவைத் தேர்தலில் 18 இடங்களை கைப்பற்றி இரண்டாவது பெரிய கட்சியாக விளங்குகிறது. இதில் அவரது மனைவி மற்றும் மகனின் சொத்து மதிப்பு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கண்டுள்ளது. அதன்படி ஹெரிடேஜ் புட் என்று சந்திரபாபு நாயுடுவால் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக […]

பாராளுமன்ற தேர்தல் முடிந்த ஐந்து நாட்களில் சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் சொத்து 770 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் நடைபெற்ற மாநில தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கட்சி வெற்றி பெற்றது. அதேபோல் மக்களவைத் தேர்தலில் 18 இடங்களை கைப்பற்றி இரண்டாவது பெரிய கட்சியாக விளங்குகிறது. இதில் அவரது மனைவி மற்றும் மகனின் சொத்து மதிப்பு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கண்டுள்ளது. அதன்படி ஹெரிடேஜ் புட் என்று சந்திரபாபு நாயுடுவால் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக இருக்கும் அவரது மனைவி மற்றும் அவரது மகன் லோகேஷ் அவர்களின் பங்குச் சந்தைகளின் தரவுப்படி சொத்துக்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. அதில் கடந்து ஜூன் மூன்றாம் தேதி ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு 424 கோடியாக இருந்தது. பின்னர் ஜூன் நான்காம் தேதி அதன் பங்கு பல மடங்கு உயரத் தொடங்கியது. இந்த நிலையில் இறுதியாக வெள்ளிக்கிழமை 661.25 ரூபாய் ஆக உயர்ந்தது. அதன் அடிப்படையில் தேர்தல் முடிவில் ஐந்து நாட்களில் சந்திரபாபு நாயுடுவின் குடும்ப சொத்து 770 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu