தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நேற்று எம்.எல்.ஏவாக தெலுங்கானா சட்டப்பேரவை சபாநாயகர் கட்டம் பிரசாத் குமாரின் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.
தெலுங்கானாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சந்திரசேகர ராவ் தலைமையில் ஆன ஆட்சி தோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. பின்னர் காங்கிரஸ் கட்சியின் ரெவந்த் ரெட்டி முதல்வராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் சந்திரசேகர ராவ் தவறி விழுந்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் கஜ்வெல் தொகுதியில் அவர் வெற்றி பெற்றாலும் எம்எல்ஏவாக பதவி ஏற்காத நிலை நீடித்து வந்தது. இந்நிலையில் தெலுங்கானா சட்டப்பேரவை சபாநாயகர் கட்டம் பிரசாத் குமாரின் அலுவலகத்தில் நேற்று எம்.எல்.ஏவாக பதவியேற்றுக்கொண்டார்.