சந்திரயான் 3 எடுத்த பூமி மற்றும் நிலவின் புகைப்படங்களை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் சந்திரயான் விண்கலம் நுழைந்தபோது, இஸ்ரோ நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது. தற்போது, பூமி மற்றும் நிலவின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. முதல் புகைப்படம் சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட போது எடுத்ததாகும். அதில், விண்வெளியிலிருந்து பூமி புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது புகைப்படம், நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் சந்திரயான் 3 நுழைந்த மறுநாள் எடுக்கப்பட்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.














