சந்திரயான்- 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சந்திராயன் 3 விண்கலம் வரும் 23ஆம் தேதி மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, மாலை 5:45 மணி அளவில் நிலவில் தரை இறங்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது மாலை 6:4 மணிக்கு தரையிறங்கும் என நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் விண்கலம் லூனா 25 தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கும் முதல் நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைக்க உள்ளது.