சந்திரயான்-3 விண்கலம் இந்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ 

March 23, 2023

சந்திரயான்-3 விண்கலம் இந்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இந்திய கோள் அறிவியல் மாநாடு நடந்தது. இதில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், சந்திரயான்-3 விண்கலம் முழுமையாக தயாராக உள்ளது. இது முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சில திருத்த வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டின் நடுப்பகுதியில் ஏவுதல் நடைபெறலாம். இந்த விண்கலமும் சந்திரயான்-2 போன்றே ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய […]

சந்திரயான்-3 விண்கலம் இந்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இந்திய கோள் அறிவியல் மாநாடு நடந்தது. இதில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், சந்திரயான்-3 விண்கலம் முழுமையாக தயாராக உள்ளது. இது முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சில திருத்த வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டின் நடுப்பகுதியில் ஏவுதல் நடைபெறலாம். இந்த விண்கலமும் சந்திரயான்-2 போன்றே ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய அமைப்பைக் கொண்டிருக்கும். சந்திரயான்-3-ன் முதன்மை நோக்கம் துல்லியமான தரையிறக்கம் ஆகும். அதற்காக, புதிய கருவிகளை உருவாக்குதல், தோல்வி முறைகளைக் கவனிப்பது போன்ற பல பணிகள் செய்யப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu