நிலவின் தென் துருவத்தில் புதிய கண்டுபிடிப்புகள் - சந்திரயான் 3 ரோவர் அசத்தல்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கியது. விக்ரம் லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவர், விண்கலம் தரையிறங்கிய சிவசக்தி புள்ளியிலிருந்து சிறிது மீட்டர் தொலைவுக்கு நகர்ந்து சென்று தகவல்களை சேகரித்து அனுப்பியுள்ளது. இந்த தகவல்களை ஆய்வு செய்து, நிலவின் தென் துருவப் பகுதி குறித்த புதிய கண்டுபிடிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிலவின் தென் துருவப் பகுதியில் மொத்தம் 103 மீட்டர் தொலைவுக்கு பிரக்யான் ரோவர் பயணித்துள்ளது. ஒற்றை […]

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கியது. விக்ரம் லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவர், விண்கலம் தரையிறங்கிய சிவசக்தி புள்ளியிலிருந்து சிறிது மீட்டர் தொலைவுக்கு நகர்ந்து சென்று தகவல்களை சேகரித்து அனுப்பியுள்ளது. இந்த தகவல்களை ஆய்வு செய்து, நிலவின் தென் துருவப் பகுதி குறித்த புதிய கண்டுபிடிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நிலவின் தென் துருவப் பகுதியில் மொத்தம் 103 மீட்டர் தொலைவுக்கு பிரக்யான் ரோவர் பயணித்துள்ளது. ஒற்றை நிலவு நாளில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், சிவசக்தி புள்ளியில் இருந்து 39 மீட்டர் மேற்கு புறமாக பிரக்யான் ரோவர் பயணித்தபோது, அங்குள்ள பாறைகளில் மாற்றங்கள் உள்ளதை கண்டுபிடித்துள்ளது. சந்திராயன் 3 மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, பாறைகளின் அளவு மற்றும் எண்ணிக்கை ஆகியவை சிவசக்தி புள்ளிக்கு மேற்கே அதிகமாக உள்ளது. மேலும், விண்வெளியில் காணப்படும் அசாதாரண சூழ்நிலைகளால் நிலவில் காணப்படும் கற்களில் மாற்றங்கள் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu