2 கட்டங்களாக ஏவப்படும் சந்திரயான் 4 - இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு

சந்திரயான் 4 திட்டத்துக்கான ஏவுதல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். அத்துடன், நிலவுக்கு செல்வதற்கு முன்பாக விண்வெளியில் வைத்து விண்கலம் அசெம்பிள் செய்யப்படும் என கூறியுள்ளார். ஏனென்றால், சந்திரயான் 4 விண்கலம் இஸ்ரோவின் சக்தி வாய்ந்த ராக்கெட்டின் சுமக்கும் திறனை காட்டிலும் கூடுதலாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளதாவது: “உலக வரலாற்றிலேயே முதல் முறையாக விண்வெளியில் வைத்து விண்கலம் ஒன்று அசெம்பிள் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. அதை அசெம்பிள் […]

சந்திரயான் 4 திட்டத்துக்கான ஏவுதல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். அத்துடன், நிலவுக்கு செல்வதற்கு முன்பாக விண்வெளியில் வைத்து விண்கலம் அசெம்பிள் செய்யப்படும் என கூறியுள்ளார். ஏனென்றால், சந்திரயான் 4 விண்கலம் இஸ்ரோவின் சக்தி வாய்ந்த ராக்கெட்டின் சுமக்கும் திறனை காட்டிலும் கூடுதலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளதாவது: “உலக வரலாற்றிலேயே முதல் முறையாக விண்வெளியில் வைத்து விண்கலம் ஒன்று அசெம்பிள் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. அதை அசெம்பிள் செய்வதற்காக முன்கூட்டியே விண்வெளி நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்படும். இஸ்ரோவின் சக்தி வாய்ந்த ராக்கெட்டால் ஒரே கட்டத்தில் விண்கலத்தை கொண்டு செல்ல முடியாது என்பதால், 2 கட்டங்களாக திட்டத்தை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக இந்த திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தவிர இந்தியாவுக்கான பிரத்தியேக விண்வெளி நிலையம் ‘பாரதிய அந்தரிக்ஷ் ஸ்டேஷன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான திட்டமும் அரசாங்க ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.”

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu