இன்று சந்திரயான் 3 விண்கலத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி புவி சுற்றுவட்ட பாதை உயர்வு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் வைத்து, சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணிகள் நடத்தப்பட்டன. இன்று மதியம் இந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பூமியிலிருந்து குறைந்தபட்சம் 236 கிலோமீட்டர் மற்றும் அதிகபட்சம் 127609 கிலோமீட்டர் தொலைவில், நீள்வட்ட சுற்றுப் பாதையில் விண்கலம் வலம் வருகிறது.
அடுத்த கட்டமாக, பூமியின் சுற்றுப் பாதையில் இருந்து, நிலவின் சுற்றுவட்டப் பாதையை நோக்கி, சந்திரயான் 3 விண்கலம் உந்தப்பட உள்ளது. இந்த நிகழ்வு ஆகஸ்ட் 1ம் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் தொடங்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன் பின்னர், நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழையும் விண்கலம், ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.