கனடா அரசு, நியமன கடிதத்திற்கு வழங்கப்படும் கூடுதல் புள்ளிகளை ரத்து செய்துள்ளது. இதன் மூலம், கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றவர்கள் குடியுரிமை பெறுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி தகவலாக உள்ளது.
போலி நியமன கடிதங்களைப் பயன்படுத்தி பலர் குடியுரிமைக்கு விண்ணப்பித்ததுதான் கனடாவின் இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணமாகும். ஆனால், இந்த மாற்றத்தால் கனடாவில் ஏற்கனவே வேலை பார்த்து வரும் பல இந்தியர்கள் பாதிக்கப்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது.