திருவனந்தபுரம் ரயில் சேவைகள் பராமரிப்பு பணி காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் கோட்டத்திற்குட்பட்ட நெய்யாற்றின்கரா - பாரசாலா ரெயில் நிலையங்களுக்கு இடையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், சில ரெயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
மார்ச் 28 ஆம் தேதி, சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127), நாகர்கோவில் டவுன் வரை மட்டுமே இயக்கப்பட்டு, அங்கு நிறுத்தப்படும். அதே நாளில், மங்களூரு சென்டிரலில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் பரசுராம் எக்ஸ்பிரஸ் (16649), திருவனந்தபுரம் சென்டிரலில் நிறுத்தப்படும்.
மார்ச் 29 ஆம் தேதி, குருவாயூரில் இரவு 11.15 மணிக்கு புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ் (16128), நாகர்கோவில் டவுன் வரை மட்டுமே செல்லும். இதற்குப் பதிலாக, காலை 5.15 மணிக்கு நாகர்கோவில் டவுனில் இருந்து எழும்பூர் நோக்கி புறப்படும். அதே நாளில், கன்னியாகுமரியில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் பரசுராம் எக்ஸ்பிரஸ் (16650), திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும்.
மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ் (16729) மார்ச் 28 அன்று மதுரையில் இருந்து 30 நிமிடம் தாமதமாக, இரவு 11.50 மணிக்கு புறப்படும்.