வரும் ஜூலை 1ம் தேதி முதல், கிட்டத்தட்ட 296 ரயில்களின் எண்கள் மாற்றப்பட உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந் தொற்று ஏற்பட்ட போது, பல்வேறு நகரங்களுக்கு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. பெருந் தொற்று நீங்கி படிப்படியாக ரயில் சேவைகள் தொடங்கப்பட்ட போதும், குறிப்பிட்ட சில நகரங்களை இணைக்கும் பயணிகள் ரயில்கள், சிறப்பு கட்டண ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, இந்த ரயில்களுக்கு தற்காலிகமாக எண்கள் வழங்கப்பட்டன. தற்போது, சிறப்பு கட்டண பிரிவில் இயக்கப்படும் ரயில்கள், வழக்கமான பயணிகள் ரயில்களாக மாற்றப்படுகின்றன. அதன்படி அடையாளம் காணப்பட்டுள்ள 296 ரயில்களின் எண்கள் மாற்றம் பெறுகின்றன. ஐந்து ஆறு ஏழு ஆகிய எண்களில் தொடங்கும் வண்ணம், ரயில்களுக்கு புதிய எண்கள் கொடுக்கப்படுகின்றன.