இன்று முதல் பாஸ்டேக் முறையில் மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் டிஜிட்டல் முறையில் சுங்கத் கட்டணத்தை செலுத்த பாஸ்டேக் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். இது, நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க உதவும்.
இந்நிலையில், பாஸ்டேக் முறையில் சில புதிய மாற்றங்களை இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவித்துள்ளது. அதன்படி, வாகனங்கள் 1 மணி நேரத்திற்கு முன்பு பாஸ்டேக் பிளாக் லிஸ்ட் அல்லது ஹாட் லிஸ்ட் ஆக இருந்தாலோ அல்லது குறைந்த இருப்பு கொண்டிருந்தாலோ, சுங்கச் சாவடியில் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். மேலும், ஸ்கேன் செய்யப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு பாஸ்டேக் செயலற்ற நிலையில் இருந்தால், பரிவர்த்தனை ரத்து செய்யப்படும். "எரர் கோட் 176" உடன் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் பயனர்கள் பயணத்தை தொடங்குவதற்கு முன்பே, பாஸ்டேக் கணக்கில் போதிய பண இருப்பு உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும்.