சாட் ஜிபிடி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த ஓபன் ஏஐ நிறுவனம், தற்போது ஜீரோ ஜிபிடி என்ற பெயரில் புதிய தொழில்நுட்பக் கருவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், குறிப்பிட்ட சொற்றொடர்கள் மனிதனால் எழுதப்பட்டவையா அல்லது சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு கருவியால் எழுதப்பட்டு, மனிதனால் எழுதப்பட்டதாக தவறாக கணக்கிடப்பட்டதா என்பதை துல்லியமாக ஆராய்ந்து அறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீரோ ஜிபிடி மென்பொருளில், குறிப்பிட்ட வாசகங்களை பதிவேற்றி, 'டிடெக்ட் டெக்ஸ்ட்' என்று கொடுக்க வேண்டும். அப்போது, இந்த வாசகங்கள் ஆராயப்பட்டு, பின்வரும் பதில்கள் கொடுக்கப்படுகின்றன:
1.மனிதனால் எழுதப்பட்டது
2.செயற்கை நுண்ணறிவு கருவியால் எழுதப்பட்டது
3.பெரும்பாலான பகுதி செயற்கை நுண்ணறிவு கருவியால் எழுதப்பட்டது
4. செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் எழுதப்பட்டதற்கு வாய்ப்புகள் அதிகம்
5.செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் எழுதப்பட்டதற்கு வாய்ப்புகள் உண்டு
6.கொடுக்கப்பட்ட வாசகத்தில் குறிப்பிட்ட சில பகுதிகள் மனிதனாலும் குறிப்பிட்ட சில பகுதிகள் செயற்கை நுண்ணறிவு கருவியாலும் எழுதப்பட்டுள்ளது
7.பெரும்பாலான பகுதி மனிதனால் எழுதப்பட்டதற்கு வாய்ப்புகள் அதிகம்
8.பெரும்பாலான பகுதி மனிதனால் எழுதப்பட்டது என்றாலும் சில பகுதிகள் செயற்கை நுண்ணறிவு கருவியால் எழுதப்பட்டது
ஜீரோ ஜிபிடி, Deepa Analysis தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த ஆய்வை செய்கிறது. இதன் கணிப்பு 98% துல்லியமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை உருவாக்க 10 மில்லியனுக்கும் மேற்பட்ட வாசகங்கள் ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.