சென்னை - பெங்களூர் இடையே டபிள் டக்கர் ஏசி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை-பெங்களூர் இடையே இயக்கப்பட உள்ள டபுள் டக்கர் ஏசி எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது சென்னை சென்ட்ரல், அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம்,பெங்களூர் கண்டான்மென்ட்,பெங்களூர் சிட்டி ஜங்ஷன் ஆக இடங்களில் நின்று செல்கிறது. இது வெளிநாடுகளில் உள்ள ரயில் சேவைகளைப் போன்ற நவீன குளிரூட்டப்பட்ட சேர் கார் பிரிவு ரயில் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் பொது பிரிவு என்று அழைக்கப்படும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்க பயணிகள் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து ரயில்வே நிர்வாகம் இந்த புதிய வசதிகளை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி டபுள் டக்கரில் ஏசி வசதி இல்லாத ஐந்து சாதாரண பெட்டிகள் மற்றும் முன்பதிவு இல்லாத ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியுடன் இன்று முதல் சென்னை -பெங்களூர் இடையே டபிள் டக்கர் ரயில் இயக்கப்பட உள்ளது.