சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி மூன்றாம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியினை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னையில் 47வது புத்தக கண்காட்சி ஆனது சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் ஜனவரி 4-ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை ஜனவரி 3ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை 4:30 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார். கண்காட்சி தினமும் வேலை நாட்களில் காலை 11:00 மணி முதலும், விடுமுறை நாளில் காலை 9 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் நடைபெற உள்ளது. இதில் தமிழக அரசின் பாட நூல் நிறுவனம், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்திய அகடமி, நேஷனல் புக் ட்ரஸ்ட் பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் உட்பட்ட பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.