சென்னை - கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயிலின் சேவை தொடங்கியுள்ள நிலையில் ஒரு வாரம் வரை டிக்கெட்கள் நிரம்பி உள்ளன.
சென்னை - கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்த ரயில் புதன்கிழமை தவிர வாரத்தின் மற்ற 6 நாட்கள் இயக்கப்படும். இந்த ரயிலில் ஏழு ஏசி சேர் கார் பெட்டிகள், ஒரு ஏசி எக்ஸிகியூட்டிவ் பெட்டி என 8 பெட்டிகள் இருக்கின்றன. மொத்தம் 596 இருக்கைகள் உள்ளன.
இந்நிலையில், இந்த ரயிலில் ஒரு வாரம் வரை (ஏப்ரல் 16-ம் தேதி) டிக்கெட்கள் நிரம்பி உள்ளன. சென்னை-கோயம்புத்தூருக்கு ஏசி சேர் கார் வகுப்பு கட்டணமாக ரூ.1,365 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் எக்ஸிகியூட்டிவ் சேர் கார் வகுப்பு கட்டணமாக, ரூ.2,485 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டியில் ஏப்ரல் 23 வரை டிக்கெட் நிரம்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.