சென்னை பெருநகர மாநகராட்சியின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி வரி விதிப்பு நிலைக்குழு தலைவர் சர்பா ஜெயாதாஸ் இந்த பட்ஜெட்டை வழங்கினார்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில், மாநகராட்சி பள்ளிகளில் மின்னணு பலகைகள் பொருத்த ரூ.64.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மழலையர் வகுப்பறைகளில் பாடங்கள், கதைகளை மின்னணு பலகை மூலம் காண்பிக்க ஒவ்வொரு வகுப்புக்கு ரூ.40,000 வழங்கப்படும்.
மேலும், தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும். 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி, போட்டித் தேர்வு விழிப்புணர்வு, விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளது.