சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வாி செலுத்துவதற்கான அவகாசத்தை ஜன.15 வரை நீட்டிக்க தீா்மானம் நிறைவேற்றப்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் டிசம்பர் மாதத்துக்கான மாதாந்திர கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 80 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த தீர்மானங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான அவகாசத்தை ஜனவரி 15-ஆம் தேதி வரை நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதுபோன்று, பணிகள் துறைக்கு நகர திட்டமிடல் துறை என பெயர் மாற்றவும், கட்டணங்களை மாற்றி அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேலும், மீனம்பாக்கம், சோழிங்கநல்லூரில் புதிய நாய் இனக் கட்டுப்பாடு மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.