சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் 2023 போட்டி சென்னை லீலா பேலஸில் இன்று தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2023 இன்று தொடங்கி 21ஆம் தேதி வரை சென்னையில் உள்ள லீலா பேலசில் நடைபெற உள்ளது. இதில் எட்டு சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொண்டு 7 ரவுண்ட் - ராபின் சுற்றுகள் கிளாசிக் செஸ் வகையில் விளையாடுவார்கள். இதற்கான மொத்த பரிசு தொகை ரூபாய் 50 லட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட உள்ளது. இப்போ போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் கேண்டிடேட் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பாக அமையும். மேலும் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்கள் ஆன டி.குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி போன்றோர் இப்போட்டியில் கலந்து கொள்கின்றனர்.