சென்னையில் Comprehensive Mobility Plan என்ற பெயரில் புதிய போக்குவரத்து திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. குறைந்த கார்பன் வெளியேற்றம், குறைந்த காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஆகியவற்றை முன்னிறுத்தி இந்த புதிய திட்டம் வடிவமைக்கப்படவுள்ளது. அத்துடன், பேரிடர் காலங்களில் தடையின்றி செயல்படும் வகையில் மீள் திறனுடன், சாலை விபத்துக்கள் இல்லாத, பாதுகாப்பான போக்குவரத்து திட்டமாக இது அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், புதிய போக்குவரத்து திட்டத்தை தயார் செய்யும் அதிகாரிகள் கூறுகையில், "சென்னை மாநகருக்கு இயந்திர வாகனம் அல்லாத பொது போக்குவரத்து அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். மேலும், மெட்ரோ ரயில் இயங்கும் பகுதிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளை மெட்ரோ ரயிலுடன் இணைக்கும் வகையில், லைட் மெட்ரோ திட்டம் கொண்டு வரப்படவுள்ளது" என்று கூறினார். மேலும், "நவீன ட்ராம் வண்டியை போலவே இருக்கும் லைட் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த 100 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும். இது மெட்ரோ ரயில் திட்டத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவானது" என்று தெரிவித்தார்.