சென்னையில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் - ராஜேஷ் சதுர்வேதி

October 7, 2022

இந்தியாவில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை, தலைநகர் டெல்லியில் இயக்கப்பட்டு வருகிறது. சுமார் 38 கிலோமீட்டர் தொலைவில் இது இயக்கப்படுகிறது. அதன் வரிசையில், தற்போது, சென்னையில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் விரைவில் துவங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி வெளியிட்டுள்ளார். சென்னை மெட்ரோ ரயில் திட்டம், இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக, வண்ணார்பேட்டை முதல் விம்கோ நகர் […]

இந்தியாவில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை, தலைநகர் டெல்லியில் இயக்கப்பட்டு வருகிறது. சுமார் 38 கிலோமீட்டர் தொலைவில் இது இயக்கப்படுகிறது. அதன் வரிசையில், தற்போது, சென்னையில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் விரைவில் துவங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி வெளியிட்டுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம், இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக, வண்ணார்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும், மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், இந்த வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாதவரம் முதல் சிப்காட் வரை, லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை, என 3 வழித்தடங்களில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 118 கிலோமீட்டர் நீளத்தில், 128 ரயில் நிலையங்களை உள்ளடக்கி இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மதிப்பு 63256 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையும் உள்ளடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ராஜேஷ் சதுர்வேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் அனைத்து வழித்தடங்களிலும் ஓட்டுநர் இல்லாத ரயில் சேவை அமைக்கப்படும். மனிதர்களின் தலையீடு இல்லாமல், தானியங்கி சிக்னல்களின் அடிப்படையில், மெட்ரோ ரயில்கள் வடிவமைக்கப்பட உள்ளன. இதற்கான திட்டப்பணிகள் 2026 ஆம் ஆண்டு நிறைவடையும்” என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu