Grindr செயலிக்கு தடை விதிக்க சென்னை காவல் ஆணையர் பரிந்துரை செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பதை எதிர்த்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் தொடர்பாக தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், Grindr செயலியை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்படும் 10 பேரில் 5 பேர் இந்த செயலியை பயன்படுத்துவது உறுதியாகியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது போதைப்பொருள் விற்பனையில் முக்கிய கருவியாக பயன்படுகிறது என கூறப்பட்டுள்ளது.