சென்னை - புதுச்சேரி சரக்கு கப்பல் சேவையை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு சரக்கு கப்பல் சேவை வேண்டும் என்று தொழில் முனைவோர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை ஏற்று விரைவில் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று சென்னை புதுச்சேரி இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குகிறது. வாரம் இருமுறை இந்த சரக்கு கப்பல் போக்குவரத்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.














