சர்வதேச செஸ் சாம்பியனான பிரக்ஞானந்தா, இந்திய விண்வெளி மையமான இஸ்ரோ உடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளார்.
இந்திய விண்வெளி மையத்தின் தலைவர் சோம்நாத், பிரக்ஞானந்தாவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து கூறினார். அப்போது, ஒரே நேரத்தில் பிரக்ஞானந்தா மற்றும் சந்திரயானின் சாதனைகள் நிகழ்ந்ததாகவும், இது இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கிய தருணம் எனவும் கூறினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இளம் தலைமுறையினர் இடையே, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பிரக்ஞானந்தா இஸ்ரோ உடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.