சத்தீஸ்கர் - மாவோயிஸ்ட் தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு

April 26, 2023

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சல்கள் தாக்குதல் அவ்வப்போது நடைபெறும். தற்போது, தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அறன்பூர் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 10 காவலர்கள் மற்றும் ஒரு வாகன ஓட்டி ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அறன்பூர் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதை அடுத்து, மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளை முடக்கும் நோக்கில், மாநில காவல் துறையால் உருவாக்கப்பட்ட மாவட்ட […]

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சல்கள் தாக்குதல் அவ்வப்போது நடைபெறும். தற்போது, தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அறன்பூர் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 10 காவலர்கள் மற்றும் ஒரு வாகன ஓட்டி ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அறன்பூர் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதை அடுத்து, மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளை முடக்கும் நோக்கில், மாநில காவல் துறையால் உருவாக்கப்பட்ட மாவட்ட காவல் படை, அறன்பூருக்கு தேடுதல் பணிக்காக சென்றுள்ளது. தேடுதல் பணி முடிந்து திரும்பும் வழியில், சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐஇடி குண்டு வெடித்து, காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் வேதனை அளிப்பதாக உள்ளது என சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகெல் கூறியுள்ளார். மேலும், இந்த விஷயத்தில் மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu