தலைமை தேர்தல் அதிகாரி பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக நாளை சென்னை வருகிறார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, அது குறித்த ஆலோசனை மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நாளை சென்னை வருகிறார். இதில் டிஜிபி தலைமை செயலாளருடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. நாளை அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஆலோசனை நடத்த உள்ளார். அதனை தொடர்ந்து நாளை பிற்பகல் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினருடன் ஆலோசனை நடைபெறுகிறது. பின்னர் நாளை மறுநாள் தமிழகம், கர்நாடகா, கேரளா மாநில தேர்தல் அதிகாரிகள், வருமான வரி, சுங்கத்துறை ஆகியோருடன் ஆலோசனை நடைபெற உள்ளது.